இனியவை நாற்பது பாடல் 6 - 10
பதினெண் கீழ்க் கணக்கு நூல்
பூதன் சேந்தனார் இயற்றிய
இனியவை நாற்பது
பாடல் 6
ஆற்றும் துணையால்
அறம்செய்கை முன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது
பாடல் 7
அந்தணர் ஒத்துடைமை
ஆற்ற மிகஇனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே
தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல்
கொண்டடையா னாகல் இனிது
பாடல் 8
ஊரும் கலிமா
உரனுடைமை முன்இனிதே
தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
கார்வரை யானைக் கதம்காண்டல் முன்இனிதே
ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது
பாடல் 9
தங்கண் அமர்புடையார்
தாம்வாழ்தல் முன்இனிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது
பாடல் 10
கடமுண்டு
வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண் பிலாதவரை அஞ்சி அகறல்
எனைமாண்பும் தான்இனிது நன்கு
Comments
Post a Comment