இனியவை நாற்பது பாடல் 1 - 5

 

பதினெண் கீழ்க் கணக்கு நூல்  


பூதன் சேந்தனார் இயற்றிய

இனியவை நாற்பது








கடவுள் வாழ்த்து

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் :குடையாளைச்
சென்றமர்ந்து ஏத்தல் இனிது

 

பாடல் 1

பிச்சைபுக் காயினும் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினிது ஆங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு

 பாடல் 2

உடையான் வழக்கினிது ஒப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன்இனிது மாணாதா மாயின்
நிலையாமை.நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு

பாடல் 3

ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் :நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரின்கோள் நட்புத் திசைக்கு

 பாடல் 4

யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை ஊரர்இனிது ஆங்கினிதே
மான முடையார் மதிப்பு

 பாடல் 5

கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயம்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொல்லாங் குரையாமை நன்று

Comments

Popular posts from this blog

Clouds

மனித உரிமைகள்

சுற்றுச்சூழல் கல்வி 2e