இனியவை நாற்பது பாடல் 1 - 5
பதினெண் கீழ்க் கணக்கு நூல்
பூதன் சேந்தனார்
இயற்றிய
இனியவை நாற்பது
கடவுள் வாழ்த்து
கண்மூன் றுடையான்தாள்
சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் :குடையாளைச்
சென்றமர்ந்து ஏத்தல் இனிது
பாடல் 1
பிச்சைபுக்
காயினும் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினிது ஆங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு
உடையான்
வழக்கினிது ஒப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன்இனிது மாணாதா மாயின்
நிலையாமை.நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு
பாடல்
3
ஏவது
மாறா இளங்கிளைமை முன்இனிதே
நாளும் :நவைபோகான் கற்றல் மிகஇனிதே
ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
தேரின்கோள் நட்புத் திசைக்கு
யானை
யுடைய படைகாண்டல் முன்இனிதே
ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன்இனிதே
கான்யாற் றடைகரை ஊரர்இனிது ஆங்கினிதே
மான முடையார் மதிப்பு
கொல்லாமை
முன்இனிது கோல்கோடி மாராயம்
செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொல்லாங் குரையாமை நன்று
Comments
Post a Comment