இனியவை நாற்பது பாடல் 36 - 40
பதினெண் கீழ்க் கணக்கு நூல்
பூதன் சேந்தனார் இயற்றிய
இனியவை நாற்பது
பாடல்
36
அவ்வித்து
அழுக்காறு உரையாமை முன் இனிதே
செவ்வியனாய்ச் செற்றுச் சினம்கடிந்து வாழ்வினிதே
கவ்வித்தாம் கொண்டுதாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது
பாடல்
37
இளமையை
மூப்பென்று உணர்தல் இனிதே
கிளைஞர்மாட்டு அச்சின்மை கேட்டல் இனிதே
தடமென் பணைத்தோள் தளிரிய லாரை
விடமென்று உணர்தல் இனிது
பாடல்
38
சிற்றாள்
உடையான் படைக்கல மாண்பினிதே
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படும்
கற்றா உடையான் விருந்து
பாடல்
39
பிச்சைபுக்
குண்பான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது
பாடல்
40
பத்துக்
கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே
வித்துக்குற்று உண்ணா விழுப்பம் மிகஇனிதே
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலின் காழ்இனிய தில்
Comments
Post a Comment