இனியவை நாற்பது பாடல் 26 - 30
பதினெண் கீழ்க் கணக்கு நூல்
பூதன் சேந்தனார் இயற்றிய
இனியவை நாற்பது
பாடல்
26
நச்சித்தன்
சென்றார் நசைகொல்லா மாண்பினிதே
உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே
எத்திறத் தானும் இயைவ கரவாத
பற்றினின் பாங்கினியது இல்
பாடல்
27
தானம்
கொடுப்பான் தகைஆண்மை முன்இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊளம்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையால் கோடல் இனிது
பாடல்
28
ஆற்றானை
ஆற்றென்று அலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுஉண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது .இல்
பாடல்
29
கயவரைக்
கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென்று இகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது
பாடல்
30
நன்றிப்
பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பினிதே
அன்றறிவார் யாரென்று அடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கினியது இல்
Comments
Post a Comment