இனியவை நாற்பது பாடல் 21 - 25

 

பதினெண் கீழ்க் கணக்கு நூல் 
பூதன் சேந்தனார் இயற்றிய

இனியவை நாற்பது








பாடல் 21

பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந்து அல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத
திறம்தெரிந்து வாழ்தல் இனிது,

பாடல் 22

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
ஒருவர்பங்கு ஆகாத ஊக்கம் இனிதே
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார்
திரிபின்றி வாழ்தல் இனிது

பாடல் 23

காவோடு அறக்குளம் தொட்டல் மிகஇனிதே
ஆவோடு பொன்ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே
பாவமும் அஞ்சாராய்ப் பற்றும் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது

பாடல் 24

வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்புஇனிதே
ஒல்லும் துணையும் ஓன்றுஉய்ப்பான் பொறைஇனிதே
இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது

பாடல் 25

ஐவாய. வேட்கை அவாஅடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது


Comments

Popular posts from this blog

Clouds

மனித உரிமைகள்

சுற்றுச்சூழல் கல்வி 2e