இனியவை நாற்பது பாடல் 16 - 20

 

பதினெண் கீழ்க் கணக்கு நூல் 
பூதன் சேந்தனார் இயற்றிய

இனியவை நாற்பது








பாடல் 16

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
எள்துணை யானும் இரவாது .தான்ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது

பாடல் 17

நட்டார்க்கு நல்ல செயல்இனிது எத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல்அதனின் முன்இனிதே
பற்பல தானியத்த தாகிப் பலர்உடையும்
மெய்த்துணையும் சேரல் இனிது

பாடல் 18

மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது

பாடல் 19

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது

பாடல் 20

சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது


Comments

Popular posts from this blog

இனியவை நாற்பது பாடல் 1 - 5

மனித உரிமைகள்

சுற்றுச்சூழல் கல்வி 2e